name='description'/> தமிழ்க்கனி: மாண்பு மிகு மறத்தமிழன் - மன்னர்மன்னன் !
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

வியாழன், 8 ஜூலை, 2021

மாண்பு மிகு மறத்தமிழன் - மன்னர்மன்னன் !

 

பாவேந்தர் பாரதிதாசனார் மகன், மாமனிதர் ,

மன்னர்_மன்னன் என்கிற கோபதி

அவர்கள்

நினைவு நாள் இன்று ஜூலை 6 , (மறைவு 6.7.2020)

பாவேந்தர்பாரதிதாசனின்‌ மக்கள் நால்வரில்

ஒரே மகன், மன்னர்மன்னன் !

 

மற்ற மூவரும் பெண்மக்கள்.பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர்,

தமிழ்,,ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் தெலுங்கு எனப் பன்மொழி

அறிந்த பன்மொழிப் புலவர் !

 

இதழாசிரியர், வானொலி நிலைய

எழுத்தாளர் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என

ஊடகத்துறையிலும்

முத்திரை பதித்தவர்

 

புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், பல்வேறு

நாடகங்களை தயாரித்து அளித்துள்ளார்.

இவர் 50க்கும் மேற்பட்ட நூல்களைஎழுதிய

தமிழறிஞரும் ஆவார்.

  

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் தலைவராக இருந்துள்ள இவர்

தமிழ்ச்சங்கத்திற்குச்

சொந்தமாகக்  கட்டடம்  கட்டித்தந்தவர் !

 


தமிழக அரசின் உயரிய விருதுகளான திரு.வி.க விருது,  கலைமாமணி 

விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி,

கலைமாமணி விருது உள்ளிட்ட பல

விருதுகள் பெற்றவர்

மன்னர்‌மன்னன் !

 

இவரது தந்தை 'புரட்சிப் பாவேந்தர்'

பாரதிதாசனாரின் வாழ்க்கை வரலாற்றைக்.

கறுப்புக்குயிலின்  நெருப்புக்குரல்" என்ற தலைப்பில்

எழுதியவர் மன்னர் மன்னன் !

  

இது தமிழக அரசின்

சிறந்த நூலுக்கான பரிசையும் பெற்றுள்ளது.

தமது 14 அகவையிலேயே" முரசு" என்ற

புரட்சிகர ஏட்டை நடத்தியமைக்காகப்

பிரஞ்சிந்திய அரசின் தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டவர் !

 

இந்திய விடுதலைப் போராட்டம் மட்டுமின்றி,

மொழிப் போராட்டத்திலும் பங்கேற்றுச் சிறை

சென்றவர் இவர் !

  

தமிழறிஞர்கள்

பலருடன் தொடர்பு கொண்டு

தமிழ்ப் பணியாற்றியவர்

மன்னர்மன்னன் !

 

இவர் அரசியல் அரங்கிலும் , பெருந்தலைவர் காமராசர், பெரியார்,

பேரறிஞர்அண்ணா, கலைஞர்கருணாநிதி,

எம்.ஜி ‌ஆர் போன்றவர்களுடன்

நெருங்கிப் பழகியவர் !

  

கலைஞர்

ஆட்சிக் காலத்தில்தான்

பாவேந்தரின்_படைப்புகள்  அரசுடைமை

ஆக்கப்பட்டன !

 

இவரின் துணைவி

#சாவித்திரி_அம்மையார்

35 ஆண்டுகளுக்கு முன்பே

காலமாகிவிட்டார் !

  

திருவாளர்கள் செல்வம், பாரதி,

தென்னவன்

மற்றும் திருமதி அமுதவல்லி

ஆகியோர் இவரின்

மக்கட்செல்வங்கள் !

  

வாழ்நாள் முழுதும் தமிழுக்குத்

தொண்டு செய்த

மாமனிதர் மன்னார் மன்னன்

தமது 92 ஆம்

அகவையில் 6 - 7 - 2020இல்

தமிழுடன் கலந்தார் !

  

இவருக்கு இதுவரை சாகித்திய_அகாடமி பரிசு

வழங்காமல் தன் பெருமையை இழந்து நிற்கிறது.

இனியாவது இவரின் தமிழ்ப் படைப்புகளுக்குச்

சாகித்தியஅகடமி  பரிசு வழங்கிப்

பெருமைப்பட வேண்டும் !

  

இவரின்  படைப்புகள் அனைத்தும்

தமிழ்நாட்டரசினால்  நாட்டுடைமை ஆக்கப்பட

வேண்டும் !

  

இவருக்குப் புதுவையில்  நினைவாலயம்

அமைக்கப்பட வேண்டும்....என்பவை

தமிழார்வர்களின் வேண்டுகோள் !


--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை


சோம.நடராசன்,

ஆட்சியர்,

”துலாக்கோல்” முகநூல்.

[தி.ஆ:2052,ஆடவை (ஆனி) 22]

{06-07-2021

----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக