name='description'/> தமிழ்க்கனி: ஜூலை 2021
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

திங்கள், 26 ஜூலை, 2021

தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார் மறைவு !

 

தமிழ்க் கடல், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

 இன்று

25, ஜூலை, 2021 இல் 

இயற்கை எய்தினார் !


புலவர் இரா. இளங்குமரனார் தொடக்கத்தில் பள்ளி 

ஆசிரியராகப் பணியாற்றியவர்,

பின்னர் நூலாசிரியர், பாவலர்

பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர்

இதழாசிரியர், உரையாளர் எனப்

 பல பணிகளையும் 

செய்துள்ளார் !

 

இளங்குமரனார் திருநெல்வேலி மாவட்டம் 

வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 

சனவரி 30, 1927 அன்று

 பிறந்தார் !


தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார்.

இளங்குமரனார் ஏப்ரல் 8, 1946 முதல் 

ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனியே

தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 

வழியாக 1951 ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் 

முதல் வகுப்பில் 

வெற்றி பெற்றார்  !

  

பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் 

பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர்

 இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958 ஆம்

 ஆண்டு மதுரை 

அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது !



இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும்

திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் இவரது நூலை 1963- 

ஆம் ஆண்டு நேரு

 வெளியிட்டார்.

 

சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது 

நூலை 2003- ஆம் ஆண்டு 

அப்துல் கலாம் வெளியிட்டார்.

  

இவருடைய நூல்கள் மதுரை பாரதி புத்தக நிலையம்,

திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த

 நூற்பதிப்புக்கழகம், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் 

ஆகியவற்றின் வாயிலாக 

வெளிவந்தன.


இளங்குமரனார் நூல்கள் யாவும் இப்பொழுது கோ. இளவழகன் 

அவர்களின் தமிழ்மண் பதிப்பகம் வழியாக 

மறுபதிப்பும் செம்பதிப்புமாக

 வெளிவந்துள்ளன.

 

ர் பெற் விருதுள்

 

2012 பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் 

விருது, எஸ். ஆர். எம்.

 பல்கலைக்கழகம் !

 

பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர்

 (D.Lit) பட்டம்

 வழங்கியுள்ளது !

 

பல ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தாலும் 

இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் 

பணிகளேயாகும் !

 

பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,

மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு 

அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை 

வகித்துத்துள்ளார்.

 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் 

அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து 

பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற 

தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப்

 போற்றி மதித்தவர்கள்.

தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் 

தொடர்ந்து குரல் கொடுத்து

 வந்தவர்.

  

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் 

தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் 

திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் 

ஆகியவற்றை நிறுவினார்.

 

தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் 

திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும வந்தார்.

தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் 

பல சிறப்புப் பரிசில்கள்

விருதுகளை வழங்கியுள்ளது.

 

தூயதமிழறிஞர் என்பதால், இவருக்கு சாகித்திய அகாதமி விருதோ

ஞானபீட விருதோ அளிக்கப்படவில்லை.

 

ஆனால் உண்மைத்தமிழர்கள் உள்ளத்தில் பீடம் அமைத்து விட்டுத் 

தமது 95 ஆம் அகவையில், 25 -7 - 20 21 இல் 

தமிழுடன் கலந்துவிட்டார்.

 

வாழ்க, வளர்க இளங்குமரனாரின் புகழ் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

ஆட்சியர்,

தமிழ்க் கனி வலைப்பூ

[தி.ஆ; 2052, கடகம் (ஆடி) 10]

{26-07-2021}

--------------------------------------------------------------------------------

தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார்


வெள்ளி, 9 ஜூலை, 2021

செந்தமிழை உயிராய்க் கொள்வீர் !

 

                            பாவேந்ரின் சங்நாம் !

                         --------------------------------------------------

                    ஆங்கிலத்தைக் கற்கையிலும்

                                         …..அயல்மொழியைக் கற்கையிலும்

                                         ……….எந்த நாளும்,


                     தீங்கனியைச் செந்தமிழைத்

                                          …..தென்னாட்டின் பொன்னேட்டை

                                           ……….உயிராய்க் கொள்வீர் !


                     ஏங்கவைக்கும் வடமொழியை

                                          …..இந்தியினை எதிர்த்திடுவீர்,

                                           ……….அஞ்ச வேண்டாம் !


                     தீங்குடைய பார்ப்பனரின்

                                          …..ஆயுதங்கள் "இந்தி வட

                                           ……….சொல்" இரண்டும் !


                     தமிழின்பேர் சொல்லி மிகு

                                          …..தமிழரிடைத் தமிழ்நாட்டில்

                                           ……….வாழ்ந்திட் டாலும்,


                     தமிழழித்துத் தமிழர்தமைத்

                                          …..தலைதூக்கா தழித்துவிட

                                           ……….நினைப்பான் பார்ப்பான் !


                     அமுதாகப் பேசிடுவான்

                                           …..அத்தனையும் நஞ்சென்க !

                                           ……….நம்ப வேண்டாம் !


                      தமிழர்கடன் பார்ப்பானைத்

                                            …..தரைமட்டம் ஆக்குவதே

                                             ……….என்றுணர்வீர் !

 

                          ********************************************************

 ஆக்கம் + இடுகை

சோம.நடராசன்,

ஆட்சியர்,

“துலாக்கோல்” முகநூல்,

[தி.ஆ: 2052, ஆடவை (ஆனி) 25]

{09-07-2021}

********************************************************

அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமிக்கும் பார்ப்பனர்கள் !

 

 

அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமிக்கும் பார்ப்பனர்கள்.

எகனாமிக்_டைம்ஸ் ஏடு_தரும்_எச்சரிக்கை !

 

#பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் - பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

  

ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் 

கொண்டிருக்கும் காரணத்தால்

 ஒரு தவறான கருத்தைப் பரப்பி

வைத்துள்ளனர்.

  

அய்யோ பாவம் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் சர்வராக வேலை பார்க்கிறார்கள். இடஒதுக்கீடு இருப்பதால் அவர்களுக்குப் படிக்கவும், வேலைக்கு போகவும் வாய்ப்பு இல்லாமல் சதி செய்யப்பட்டு விட்டது என்று உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

  

பார்ப்பனர் அல்லாதாரும் இந்த மாயச் சுழலில் சிக்கி தாளம் போடுகிறார்கள்.

  

இந்தப் பொய்த்திரையை கிழிக்கும் வகையில்தான் "எகனாமிக் டைம்ஸ்"

ஏடு (2019 மே 12 - 19) 

ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விவரங்களைத் தந்துள்ளது.

 

பணக்காரர்கள் என்று வரும் பொழுது பார்ப்பனர்கள் 49.9 விழுக்காடாகும். பிற்படுத்தப்பட்டோர் 15.8 விழுக் காடாகும். தாழ்த்தப்பட்டோர் 9.5 விழுக்காடாகும்.

 

உண்மை நிலை இவ்வாறு இருக்க பார்ப்பனர் எல்லாம் பரம ஏழைகள் போல பம்மாத்து பிரச்சாரம் நியாயம்தானா?

  

இதனை நம்பும் பார்ப்பனரல்லாத மக்களின் மனநிலையை என்னவென்று சொல்லுவது !


ஏழை என்று எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் 4.6 விழுக்காடுதான், பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகள் 18.9 விழுக் காட்டினர் ஆவர். பிற்படுத்தப்பட்டோரில் பார்ப்பனர் களை விட ஏழைகள் அதிகம் என்பதை கவனிக்க வேண்டும்.

 

அதே போலவே தாழ்த்தப்பட்டவர்களில் ஏழைகள் 28.4 விழுக்காடாகும். இவர்களில் பணக்கார்கள் 9.5 விழுக்காடே!

 

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன? ஏழ்மைக்கும், ஜாதிக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்.

  

அதே போல பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

 

உத்தியோக நிலைமையை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம்.


எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஓபிசி அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்த இடங்களைக் காண்க:

  

1. குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்த இருக்கைகள்- 49 இவர்களில் 39 பார்ப்பனர்கள் SC, ST - 4 OBC - 6

 

2. குடியரசு துணைத் தலைவர் செயலகத்தின் பதவிகள் 7 இங்கே 7 பதவியிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். SC-0 ST- 0 OBC - 0

  

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20 பார்ப்பனர்கள்- 17 SC, ST-1 OBC - 2

  

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் பார்ப்பனர்கள் - 31 - SC, ST - 2 OBC - 2

 

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இருக்கைகள் 274.  பார்ப்பனர்கள் – 259,  SC, ST - 5 OBC - 10

  

6. பாதுகாப்பு அமைச்சகம் 1379.  பார்ப்பனர்கள் 1300.  SC, ST - 48 OBC - 31

  

7. சமுக நல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மொத்தருக்கைகள் 209. பார்ப்பனர்கள் – 132. SC, ST - 17 OBC - 60

  

8. நிதி அமைச்சின் மொத்த இருக்கைகள் 1008.  பார்ப்பனர்கள்942.  SC, ST - 20 OBC - 46

  

9. பிளானிங் அமைச்சகத்தில் மொத்தம் 409  பதவிகள் பார்ப்பனர்கள் – 327.  SC, ST - 19 OBC - 63

  

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த இருக்கைகள் 74.  பார்ப்பனர்கள் 59. SC, ST- 4 - OBC - 9

 

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகத்தின் மொத்த இருக்கைகள் 121.  பார்ப்பனர்கள் 99.  -SC, ST-0 OBC- 22

 

12. ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் 27, ஒட்டு மொத்தம் பார்ப்பனர்கள் – 25.  SC, ST- 0 OBC - 2

 

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140  பதவி. பார்ப்பனர்கள் – 140.  SC, ST - 0 OBC - 0

  

14. மத்திய அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் 108  பதவி. பார்ப்பனர்கள் 100.  SC, ST- 3 OBC - 5

 

15. மத்திய செயலாளர் பதவிகள் 26.  பார்ப்பனர்கள் – 18.  SC, ST - 1 OBC -7

 

16. உயர்நீதிமன்ற நீதிபதி 330 பதவி.  பார்ப்பனர்கள் – 306.  SC, ST - 4 OBC - 20

  

17. உச்சநீதிமன்ற நீதிபதி 26 பதவி.  பார்ப்பனர்கள் – 23.  SC, ST-1 OBC - 2

  

18. மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரி 3600 பதவி.  பார்ப்பனர்கள் – 2750.  SC, ST - 300 OBC - 350

 

(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட , 'யங் இந்தியா' எனப்படும் நிறுவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டில் கிடைத்த தகவல்)

 

இப்படி எல்லா நிலைகளிலும் வலுவாக வளமாக இருக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் ஏதோ பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று கூறி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்காக பாரதீய ஜனதா என்ற பார்ப்பன ஜனதா அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது

 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு (அ.தி.மு.க. அரசு)  - அரசனை மிஞ்சிய விசுவாசியாக இதனைச் செயல்படுத்த முண்டா தட்டி எழுகிறது.

 

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இடஒதுக்கீட்டில் பார்ப்பனத் தன்மையோடு செயல்படுவது மன்னிக்கவே முடியாத வெட்கக் கேடாகும்.

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

ஆட்சியர்,

“துலாக்கோல்” முகநூல்.

[தி.ஆ 2052, ஆடவை (ஆனி) 25]

{09-07-2021}

-----------------------------------------------------------------------------------------