name='description'/> தமிழ்க்கனி: தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை !
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை !

 

பொழுது விடிந்ததும் கண்விழிக்க

வேண்டிய பொருட்கள் என்று ஐந்திற(பஞ்சாங்க) ,

கணிய(ஜோதிட) நூல்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளன.

 

அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு

ஒரு பொருள் நாடு, இனம் , மொழி எல்லைகளையெல்லாம் கடந்து

உலக மக்களை ஈர்த்து ஒவ்வொருநாளும்

விடிந்ததும் "என் முகத்தில் விழி"

என முன்னிற்கிறது.

 

அதுதான் #முகநூல் என்கிற

#ஃபேஸ்புக் (#Facebook)

இந்த முகநூல் என்கிற

ஃபேஸ்புக் (Facebook)

தோற்றுவிக்கப்பெற்ற நாள்

#ஃபெப்ரவரி_4_2004

 

முகநூல் (Facebook, ஃபேஸ்புக் ) 2004 இல் தொடங்கிய இணையவழி சமூக

வலையமைப்பு நிறுவனமாகும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்

பயின்று கொண்டிருந்த மாணவர்

#மார்க்சக்கர்பர்க் ஹார்வர்ட்

மாணவர்களுக்காக

ஆரம்பித்ததுதான் முகநூல் .

 

பின்பு வேறு "ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்" முகநூலில்

அனுமதி கிடைத்தது. அன்றைய

முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம்.

 

அலெக்சா நிறுவனத்தின்

மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும்

முகநூல்தான் இரண்டாவது மிகப்

பரவலமான இணையத்தளமாகும்.

 

#fb. பேஸ்புக்கினை தமிழில்

#முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு

அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பேஸ்புக் அல்லது முகநூல்

என்கிற 2004ல் தொடங்கப்பட்ட

இணையவழி சமூக வலையமைப்பான

இதில் , டிசம்பர்,2020கணக்கெடுப்பின்படி

280 கோடிப்பேர் பயபடுத்துபவர்ளர்களாக

(உபயோகிப்பாளர்கள்) உள்ளனர்.

 

13 வயதிற்கு மேற்பட்டவர்கள்,

சரியான மின்னஞ்சல் முகவரியை

உருவாக்கிக் கொண்டு முகநூலில்

தங்களின் பெயரைப் பதிவு செய்துகொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை

நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள்

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளத்

தகுதியானவர் ஆவர்.

 

முகநூலை #மார்க் #சக்கர்பர்க்

தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின்,

டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார்.

 

பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு

பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர்.

 

2008ல்,முகநூலின் தலைமையகம்

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில்

தொடங்கப் பட்டது. 2010ல்,

முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக

உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய

இணையதள நிறுவனமாக உயர்ந்தது.

 

2011ல் முகநூலின் தலைமையகம்

மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு

மாற்றப்பட்டது.

 

இந்தியாவில் இந்திய தகவல் தொழில்

நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த

சட்டம் ஆகியவை #18வயதுக்குட்பட்டவர்கள்

பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை #ஏற்பதில்லை.

இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில்

கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

 

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது.

 

மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம்

இதில் குறைவு. ஏனென்றால் இந்த

இணையதளத்தை உபயோகிப்போர்

இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே

விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க

அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

 

இணையதள

முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

 

தான் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட

தகவல்களை யாரெல்லாம் அறிந்து

கொண்டார்கள், யாரெல்லாம்

தன்னைப் பற்றிய தகவல்களைத்

தேடினார்கள் என்று அறிந்து

கட்டுப்படுத்தலாம்.

 

இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்)

என்ற இணையதளத்தை

ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகிறது.

 

முகநூலில் நண்பர்களுடன் தகவல்

பரிமாறும் சுவர், புகைப்படங்கள்

பதிவு செய்யும் வசதி, நண்பர்களின்

தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை

குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு.

 

200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம்.

 

சுமார் 60 நாடுகளில் உள்ள 280 கோடி

மக்கள் 200 கைபேசி இயக்கிகள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது.

 

ஜூலை 2011ல், #ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.

 

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது.

2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது.

fb.நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல்

இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

 

2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான

விருதைப் பெற்றுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Fb.ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

 

சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர்.

 

50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

முகநூலில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது.

 

வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.

fb.ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது முகநூல்.

 

பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.

சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.

 

விவாரத்து ,குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.

 

'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.

fb.முக நூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முக நூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க என்ற பக்கத்திற்கு செல்லலாம்.

 

தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும்.

 

ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.

 

பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் எப். ஏ. ஆர். சி(FARC)க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது முகநூல்.

 

2017 இல் தமிழகத்தில் #ஏறுதழுவுதலுக்குத் (#ஜல்லிக்கட்டு) தடை விதிக்கப்ட்ட போது முகநூல் மூலம் தொடர்பு கொண்டு உலகமே வியக்கும் வண்ணம் வரலாறு காணாத "#மெரினா #புரட்சி" நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு #பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.

 

2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.

 

கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர்.தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences) நடத்தியது.

 

இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

 

மொத்த முகநூல் உறுப்பினர்களில் எட்டு கோடி பேர் போலியான பெயர்களில் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

fb.தமிழகத்தில் சென்னை காவல் துறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதத்திற்கு குறைந்தது பத்து புகார்கள் முகநூல் மோசடி தொடர்பானவையாக வருகின்றன.

 

2013 ஆம் ஆண்டு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தியதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் முகநூல் நிறுவனம் பலருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை வந்தது.

 

பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து அவற்றையெல்லாம் முடிந்ததும் பதினாறு வயதுப் பருவமங்கையாக / கட்டிளங்காளையாக முகநூல் வளர்ந்து விட்டாள்/ விளர்ந்து விட்டான்.

 

உலகம் முழுதும் உள்ள #பதின்மவயது #இளையோர் முதல் #நூறாண்டை எட்டிக் கொண்டிருக்கும் #முதியோர் வரை உள்ள #இருபாலரையும் முகநூல் ஆட்கொண்டு விட்டது.

 

அத்தகைய முக நூலுக்கு பல்லாண்டு கூறி வாழ்த்தி மகிழ்வோம்.

 

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை 


 

சோம.நடராசன்

ஆட்சியர்

துலாக்கோல் முகநூல்

{04-02-2021]

---------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. முகநூல் பற்றி இதுவரை நான் அறியாத பல தகவல்களை சுவையாக தொகுத்து தந்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. முகநூலைப் பற்றி எத்துணைச் செய்திகள் ! அப்பப்பா ! இத்தகைய அரிய செய்திகளைத் தருவதில் தங்களுக்கு இணை தாங்களே !

    பதிலளிநீக்கு