name='description'/> தமிழ்க்கனி
தமிழ், தமிழுணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு பற்றிய பதிவுகள் !

திங்கள், 26 ஜூலை, 2021

தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார் மறைவு !

 

தமிழ்க் கடல், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

 இன்று

25, ஜூலை, 2021 இல் 

இயற்கை எய்தினார் !


புலவர் இரா. இளங்குமரனார் தொடக்கத்தில் பள்ளி 

ஆசிரியராகப் பணியாற்றியவர்,

பின்னர் நூலாசிரியர், பாவலர்

பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர்

இதழாசிரியர், உரையாளர் எனப்

 பல பணிகளையும் 

செய்துள்ளார் !

 

இளங்குமரனார் திருநெல்வேலி மாவட்டம் 

வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 

சனவரி 30, 1927 அன்று

 பிறந்தார் !


தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார்.

இளங்குமரனார் ஏப்ரல் 8, 1946 முதல் 

ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனியே

தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 

வழியாக 1951 ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் 

முதல் வகுப்பில் 

வெற்றி பெற்றார்  !

  

பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் 

பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர்

 இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958 ஆம்

 ஆண்டு மதுரை 

அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது !



இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும்

திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் இவரது நூலை 1963- 

ஆம் ஆண்டு நேரு

 வெளியிட்டார்.

 

சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது 

நூலை 2003- ஆம் ஆண்டு 

அப்துல் கலாம் வெளியிட்டார்.

  

இவருடைய நூல்கள் மதுரை பாரதி புத்தக நிலையம்,

திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த

 நூற்பதிப்புக்கழகம், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் 

ஆகியவற்றின் வாயிலாக 

வெளிவந்தன.


இளங்குமரனார் நூல்கள் யாவும் இப்பொழுது கோ. இளவழகன் 

அவர்களின் தமிழ்மண் பதிப்பகம் வழியாக 

மறுபதிப்பும் செம்பதிப்புமாக

 வெளிவந்துள்ளன.

 

ர் பெற் விருதுள்

 

2012 பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் 

விருது, எஸ். ஆர். எம்.

 பல்கலைக்கழகம் !

 

பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர்

 (D.Lit) பட்டம்

 வழங்கியுள்ளது !

 

பல ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தாலும் 

இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் 

பணிகளேயாகும் !

 

பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,

மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு 

அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை 

வகித்துத்துள்ளார்.

 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் 

அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து 

பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற 

தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப்

 போற்றி மதித்தவர்கள்.

தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் 

தொடர்ந்து குரல் கொடுத்து

 வந்தவர்.

  

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் 

தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் 

திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் 

ஆகியவற்றை நிறுவினார்.

 

தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் 

திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும வந்தார்.

தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் 

பல சிறப்புப் பரிசில்கள்

விருதுகளை வழங்கியுள்ளது.

 

தூயதமிழறிஞர் என்பதால், இவருக்கு சாகித்திய அகாதமி விருதோ

ஞானபீட விருதோ அளிக்கப்படவில்லை.

 

ஆனால் உண்மைத்தமிழர்கள் உள்ளத்தில் பீடம் அமைத்து விட்டுத் 

தமது 95 ஆம் அகவையில், 25 -7 - 20 21 இல் 

தமிழுடன் கலந்துவிட்டார்.

 

வாழ்க, வளர்க இளங்குமரனாரின் புகழ் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

சோம.நடராசன்,

ஆட்சியர்,

தமிழ்க் கனி வலைப்பூ

[தி.ஆ; 2052, கடகம் (ஆடி) 10]

{26-07-2021}

--------------------------------------------------------------------------------

தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார்